Wednesday, October 30, 2019

Kavithaigal


இயற்கை
இயற்கை இறைவனின் வர்ண ஜாலம்
கண்ணிற்கு குளுமை
எண்ணத்தில் இனிமை
கற்பனை வளர்க்கும்
கவிதாயினிகளை உருவாக்கும்
இத்தகு இனிமை
இயற்கைக்கு மட்டுமேயுண்டு!
இயற்கை காப்போம்!
இனிமையாய் வாழ்வோம்!
பேரிடர் தவிர்ப்போம்!
மழை பெறுவோம்!
மரம் காக்கும் மனம் பெறுவோம்!
மண் வளம் காப்போம்!
வெள்ளப்பெருக்கைத் தடுப்போம்!
ஐம்பூதங்கள் நம்மை
காப்பதால் – தமிழன்
வாழ்வியல் ஐநிலம் சார்ந்ததோ!
ஐம்பூதங்களை சந்தப்படுத்துவோம்!
ஐம்பூதங்கள் சமப்படுத்த
இயற்கை வளத்தைக் காப்போம்!


கார்
கார்கால மாலைப்பொழுதில்
சாலையொரம் விடப்பட்டகார்
காத்திருந்து காத்திருந்து
ரோசமுடன்
காவலர் காரில் ஏறி
ஒய்யார பவனி வந்தது!
தப்புணரிந்த கார்க்காரர்
தண்டப் பணம் கட்டி
காவலரிடமிருந்து மீட்டார்!
கனிவுடன் தன் காரை..
வீதியில் விடப்பட்ட கார்
கால் வலித்தவுடன்
காவலரைத் தன்
பகட்டுப் பார்வையால்
சுண்டி இழுத்து……
பவ்வியமாய்
காவல்துறை வண்டியில்
ஏறி உட்கார்ந்து
கம்பீர ஜாம்பவானாய்
வீதி உலா வந்தது
காவலர் துணையுடன்!
காடு
ஐந்தறிவு ஜீவன்களுக்கு
இறைவன் கட்டிய வீடு!
காட்டழித்த மனிதனை
சிங்கம் புலி கரடி யானை என
ஊருக்குள் பவனி வர
மனிதன்
ஓடி ஓடி ஒழிந்தாலும்
விரட்டி விரட்டியடித்தது
ஐந்தறிவு ஜந்துக்கள்
அவைகள் அவனுக்குப் போதித்தன
காட்டின் அவசியம் உணர்த்தின!
உணர்ந்தான்! உணர்ந்தான்!
காட்டின் அவசியத்தை
காட்டை உருவாக்கினான்!
அது கண்டு மகிழ்ந்த முகில்
கூடிக் கூடிக் குலாவியது!
மகிழ்ந்து மழை பொழிந்தது!
நாடு வளம் கொழித்தது!
நாடு வாழ காடு தேவை!
உணர்வோம்! உணர்த்துவோம்!


விஞ்ஞானம்
வெள்ளிக் கோடிரண்டு
வானில் மின்னலிட
இரு கோடிணைந்து
ஓர் கோடாய்
விண்ணில் பயணித்த
வெண்புகைக் கோடு
உணர்த்தியது
பாலின சமத்துவத்தை!
அன்னாந்து பார்த்து
ஆச்சரியப்படுத்திய வேளை!
வெள்ளி (வெள்ளி போல மின்னும்) மீனுக்காக
காத்திருந்தான் கடற்கரையோரம்
ராக்கெட் ஏவு(ம்)னேரம்
முடிவதற்காய்!
முழு துக்கத்துடன்
எதிர்கால இழப்புகளை
எண்ணி எண்ணி ஏங்கியவன்!
ஏமாந்துதான்  போனான்!
அவனின் அன்றைய
எதிர்காலத்தை சூனியமாக்கிய
சூத்திரதாரி விஞ்ஞானிகளால்!
விஞ்ஞானி வளர்ந்தான்
மின்னல் வேகத்தில்!
மீனவன் தேய்ந்தான்
நிலவாய்த் தேய்ந்தான்
அன்றைய வருமான
இழப்பால்!
சாமானியனை
வென்ற விஞ்ஞானம்!
---------



No comments:

Post a Comment