Wednesday, October 30, 2019

தலைநிமிர்ந்த தமிழ்நாடு: தென்னம்பிள்ளையாய் கீழடி


தலைநிமிர்ந்த தமிழ்நாடு
தென்னம்பிள்ளையாய் கீழடி

முனைவர் ஜே. ஸ்டெல்லா, முதல்வர்
போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம்
(தமிழக அரசு நிறுவனம்), சென்னை – 21.

தென்னை மரத்தடியில்
தென்மாங்கு பாடிய கீழடி
தென்றலாய் தமிழனைத் தழுவி
இந்திய வரலாற்றின் தொடக்கம் நீயென
நயமாக எடுத்தியம்பிய
கருப்பு சிவப்புச்சட்டி…
தமிழனே தலைமகனென
உரிமை கோரிய கீழடி!
பானையில் பொறித்த தமிழ் பிராமி
மூத்தகுடி நீயென பெருமைபேச
விழித்துக் கொண்டி தமிழன்
உரிமைகோரி போராட
பாண்டியனின் பூமியில்
நீதி வெல்ல – ஐமுறை
தோண்டித் தோண்ட
ஐம்பூதமாய் உயிர்த்து
முன்னோடி தமிழனவன் என்றுரைக்க….
மணிமணியாய் கைவினை பொருட்கள்
கைத்தொழில் ! தொழிற்கூடமென…
கடை விரித்த அகழாய்வு……!
கண் விரித்து வியப்பின் உச்சத்தில்
உலகத் தமிழன் !....
சங்கத் தமிழ் வளர்த்த பூமியது !
தென்னை மரத்தடியில்
தென்னம்பிள்ளையாய்
தமிழன் வரலாறு கூறும் கீழடி !

உரிமை மீட்ட கீழடி
முனைவர் ஜே. ஸ்டெல்லா, முதல்வர்
போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம்
(தமிழக அரசு நிறுவனம்), சென்னை – 21.

வடக்கு தேய்கிறது – ஆம்
தெற்கு வளர்கிறது
வரலாற்றின் எச்சமது
தமிழினத்தின் உச்சமது !
இந்திய வரலாற்றை
கால வெள்ளத்தில்
அழித்து விட்டு…!
தமிழர்களுக்கு  மேலான
வாழ்வளித்த(து) – கீழடி !
கீழடியில் தொடங்கு
வரலாற்றையென மண்ணடியில்
கிடைத்த எச்சங்கள்
தமிழனின் பெருமையை பேசி
ஐயம் நீக்கிய ஐந்தாம்கட்டாய்வு !
தோண்டத் தோண்ட
ஐம்பூதமாய்… முன்னோடி
தமிழனின் வரலாறு
விழி வியக்க செய்த
விஞ்ஞான தமிழனவன் !
மெய்ஞானமாய் கட்டி
வாழ்ந்த வம்சமென
உரக்கக் கூறி உசுப்பி விட்டு
உரிமை மீட்ட கீழடி !
உண்மை பேசும் கீழடி !


உறுதி மொழி
“தென்னைம்பிள்ளையாய் கீழடி” என்ற கவிதை முற்றிலும் முனைவர் திருமதி ஜே. ஸ்டெல்லா ஆகிய என்னுடைய சொந்த படைப்பு என உறுதியளிக்கிறேன்.


ஜே. ஸ்டெல்லா

சுயவிவரக் குறிப்பு
முனைவர் ஜே. ஸ்டெல்லா
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் என்ற ஊரில் திரு. மு. ஜேசுதாஸ், திருமதி. ஜே. லில்லிபுஷ்பம் தம்பதியரின் மகளாக மூன்றாவது குழந்தையாக 11.04.1964ல் பிறந்தேன்.  எனது தந்தை இரண்டாம் உலகப்போர் வீரரும், சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார்.  அவர் மெட்ராஸ் பாய்ஸ் ரெஜிமெண்டில், தன் எட்டாம் வகுப்பு முடித்தவுடன் சேர்ந்து பணியாற்றினார்.  இந்திய சுதந்திரத்திற்குப்பின் இராணுவப் பணியிலிருந்து விலகி, காவல்துறையிலும், பின்னர் அரசு ஓராசிரியர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 
எனது தாயாரும் அரசுப்பள்ளி ஆசிரியராவார்.  என்னுடன் பிறந்தவர்கள் மூத்த சகோதரியும், இளைய சகோதரனும் ஆவர்.  1992 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் நாள் எனது ஒன்றுவிட்ட அத்தை மகன் திரு. செ. மதியழகன் என்பவருடன் எனது திருமணம் நடைபெற்றது.  எங்களுக்கு ம. ஜெபசெல்வி என்ற மகளும், ம. பிரவின் ராஜா என்ற மகனும் உள்ளனர்.
கல்வி மற்றும் பணி:
     நான் எனது ஆரம்பக் கல்வியை இலத்தூர் அரசுத் தொடக்கப்பள்ளியிலும், செங்கோட்டை ஏ.ஜி.பள்ளியிலும் கற்றேன்.   ஆறாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை இலத்தூர் லஷ்மி ஹரிஹரா உயர்நிலைப்பள்ளியிலும் +2 ஆம் வகுப்புகளை குற்றாலம் திருமலை குமாரசுவாமி தேவஸ்தானம் பெண்கள் மேனிலைப்பள்ளியிலும், குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் பி.ஏ. வரலாற்றுத் துறையிலும் பயின்றேன்.  அக்கல்லூரி, இறுதியாண்டு மாணவியரில் 1983-1984 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாணவியாக தேர்வுசெய்யப்பட்டு, தமிழ்நாடு ஆளுநர் சிறப்பு நிதி பரிசினை வழங்கி கௌரவித்தது.  விருதுநகர் வ.வே. வன்னிய பெருமாள் கல்லூரியில் எம்.ஏ. வரலாற்று பாடத்தில் 1984-1986 ஆம் ஆண்டில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்று  பட்டம் பெற்றேன்.  அக்கால சமூக சீர்கேடாக பெண்கல்வி மறுக்கப்பட்டதால், போராடியே எனது உரிமையை மீட்டேன்.  மேலும், பி.எட் பட்டத்தை மதுரை காமராஜர் பல்கலை தொலைதூரக் கல்வியில் பெற்றேன்.  எனது ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை 1992-1993 ஆம் ஆண்டு சென்னை கிண்டியில் செயல்பட்ட அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றேன். 
1993-1994 ஆம் ஆண்டில் சமூக நலத்துறையால் சென்னை சிறுமலர் காது கேளாதோர் மேனிலைப் பள்ளியில் நடத்தப்படும்  சிறப்பு ஆசிரியர் பயிற்சியை படித்தேன்.  அப்பள்ளியிலேயே தொடந்து 1997 வரை சிறப்புப்பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றினேன். அதன் பின்னர் சுமார் இரு ஆண்டுகள் தனியார் நிறைநிலை மேனிலைப்பள்ளியில் பணியாற்றினேன்.  சில ஆண்டுகள் பெற்றோரை பராமரிப்பதற்காக பணிக்கு செல்லாமல் இருந்தேன்.  மீண்டும் 2002ல் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் உதவி பேராசிரியராக வரலாற்றியல் துறையில் பணியாற்றினேன்.    ஓராண்டு இடைவெளிக்குப்பின் சர்ச் பார்க் ஆங்கிலோ இந்தியன் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பகுதி நேர வரலாற்று பேராசிரியராகப் பணியாற்றினேன்.  வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நேர்காணலுக்கு திருநெல்வேலி ம.தி.தா. இந்து கல்லூரியில் பதிலி நியமன பேராசிரியராக ஈராண்டுகள் சனவரி 2006-2007 டிசம்பர் வரை பணிபுரிந்து கொண்டிருக்கும்போது, 2007 ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டு 13.10.2017 வரை வரலாற்றியல் துறை உதவிப் பேராசிரியராகவே பணியாற்றினேன். 
காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி (தன்னாட்சி) சென்னையில் எனது சேவை அளப்பறியது.  மாணவர் நலனில் மிகுந்த ஈடுபாடும் அக்கறையும் கொண்டு.  மாணவர் வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளராக 2007 – 08லும், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலராக 2010-14 வரையிலும்; சிவப்பு நாடாக்குழு திட்ட அலுவலராகவும், யு.ஜி.சி பார்வையற்றோர் உயர்கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் (2010 – 2014), மாணவர் கூட்டுறவு சங்கத் தலைவராகவும் (2014-2014), கல்லூரி வளாக தேர்தல் அலுவலராகவும் தன்னலமின்றி சேவையாற்றினேன். எனது முனைவர் ஆய்வுப் பட்டத்தை திருநெல்வேலி மாவட்டத்தில் பெண்கல்வி (1800 – 1947) என்ற தலைப்பில் 21.09.2014ல் சமர்ப்பித்து, முனைவர் பட்டத்தை 04.10.2017 அன்று சென்னை பல்கலைக்கழகத்தால் பெற்றேன்.  எனக்கு ஆசியப் பல்கலைக்கழகம் ட்டி.லிட்., (D.Litt.) மதிப்புறு பட்டத்தை 2018 ஆம் ஆண்டு நேபாளத்தில் வழங்கியது.
தமிழகத்தில் திருநங்கையர்களின் சமூக, பொருளாதார நிலை பற்றிய ஆய்வறிக்கையை தமிழ்நாடு உயர்கல்வி கழகத்தில் சமர்ப்பித்துள்ளேன்.
விருப்ப மாறுதலில் 14.10.2017ல் தமிழக அரசு புதிதாக துவங்கிய போட்டித்தேர்வுகள் பயிற்சி மையத்தின் நிறுவன முதல்வராக பொறுப்பேற்று உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றினேன்.  மீண்டும் 01.06.2019ல் முதல்வராக முழு கூடுதல் பொறுப்புடன் பணியாற்றி வருகிறேன்.
தமிழ்ப்பணி
2010ல் உலகத்தமிழ்    பேரவையுடன்   இணைந்து நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உதவியுடன் “தமிழர் வரலாறு”  என்ற  மேடை    நாடகம்     தேவநேயபாவாணர்      நூலகத்தில்  நடித்துக்காட்டப்பட்டு காணொளியாக பதிவு செய்தும், அதே நாடகத்தை மீண்டும் சுற்றுலா பொருட்காட்சி அண்ணா திடலில் நடத்திய நாடகத்தின் காணொளியை முனைவர் திரு. ஜனார்த்தனன் ஐயா பிரான்சு நாட்டில் பாரிசில் உலகத்தமிழ் பேரவையில் திரையிட்டு காட்டப்பட்டபோது, தமிழரின் புரட்சி உலக நாடுகளுக்கே முன்னோடி என்பதனை புரிந்து கொண்டு வியந்துள்ளனர்.  இதன் தொடர்சியாக பிரான்சிலிருந்து திரு. சிவபாலசுந்தரம் ஐயா அவர்கள் சென்னை சீனிவாசா குப்பத்தில் நடத்திய மாபெரும் மருத்துவ முகாமிற்கு வருகைபுரிந்து  எங்களது சமூக சேவையை பாரட்டிச் சென்றார். திருநெல்வேலி மாவட்டம்,  பொதிகை தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் பங்கேற்று, பன்னாட்டு கருத்தரங்கில் கட்டுரை மற்றும் கவிதை வாசித்துள்ளேன்.
இதழியல் மற்றும் ஊடகச் சேவை:
ஆகத்து மாதம் 2015ஆம் ஆண்டு முதல் இளைஞர்களுக்கான மாதந்திர தொடர் கட்டுரை “நல்லதை நாடி நலம் பல பெற” என்ற பெருந்தலைப்பின் கீழ் மாதம் ஒரு தலைப்பில் கட்டுரையை “டுடே இதழில்” எழுதி வருகின்றேன்.  தமிழகமெங்கும் பள்ளி மற்றும் கல்லுரி மாணவர்களிடையே தமிழில் விழிப்புணர்வு மற்றும் தன்னார்வமூட்டும் பேருரை ஆற்றிவருகின்றேன்;
“இந்திய வரலாற்றில் தமிழ் சமூத்தினரின் பங்களிப்பு” என்ற தலைப்பில் உரையாற்றிய உரை யுடியூப்பில், பரணி டிவி, தாமிரா டிவி சேனல்களில் உள்ளது.  மேலும் தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு உரை இணையதளத்தில் உள்ளன.

     தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் “பெண்ணியம்” மற்றும் “சீன - ஜப்பானிய வரலாறு” ஆகிய இருபாடங்களை தயாரித்து வழங்கியுள்ளேன்.

தமிழக அரசால் நடத்தப்பட்டுவரும் போட்டித் தேர்வுகள் பயிற்சி கையேடு தொகுத்து வழங்கியுள்ளேன்

தமிழில் எழுதி வெளியிட்ட புத்தகங்கள்:
தமிழ் மொழியில் 12 புத்தகங்களை எழுதி மதி பப்ளிகேஷன்ஸ் என்ற பெயரில் வெளியிட்டுள்ளேன்.  அவையாவன:
1.        மெட்ராஸ் – சென்னை மாநகராட்சி வளர்ச்சி வரலாறு (கோட்டை முதல் கல்லறை வரை – 1600-2016)
2.        தமிழக நிகழ்த்துக்கலை வரலாறும் வளர்ச்சியும் – (மைசூர் மைய மொழியியல் நிறுவனத்தால் தேர்வுசெய்யப்பட்டு மொத்தமாக வாங்கப்பட்டது).
3.        தொல்லியல்
4.        ஒரு காலைப் பொழுதில் (கவிதை)
5.        தமிழக நிகழ்த்துக்கலை வரலாறும் வளர்ச்சியும் (மேம்படுத்தி விரிவுபடுத்தப்பட்டது)
6.        மெட்ராஸ் – சென்னை மாநகராட்சி வளர்ச்சி வரலாறும் (மறுபதிப்பு)
7.        இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வரலாறு (மைசூர் மைய மொழியியல் நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டு, நிதி வழங்கி வெளியிடப்பட்டது).
8.        இதழியல் அடிப்படை கொள்கைகளும் கோட்பாடுகளும்
9.        அணு ஆற்றல் துறையால் வலிமையான இந்தியா
10.      வலிமையான இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வரலாறு தொகுதி – I
11.      வலிமையான இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வரலாறு தொகுதி – II
12.      மதராஸ் – சென்னை பெருநகர மாநகராட்சி வளர்ச்சி வரலாறு (1600-2018) ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன்.

மேலும், “தமிழக வரலாற்றில் போற்றப்பட வேண்டிய பெண்களின் பங்களிப்பு”, “பெண்களின் மேம்பாட்டில் தமிழக அரசின் பங்கு” மற்றும் “தமிழக வரலாற்றில் சமூகப்போராளிகள்” ஆகிய நூல்கள் அச்சில் உள்ளன.

மாணவர்கள் மேம்பாட்டு முயற்சியும், சமூக சேவையும்:
மேலும், குடிப்பழக்கத்திலிருந்து மாணவர்களை மீட்டெடுத்தல்,  குடும்ப பிரிவினையை தடுத்து வாழ வழி செய்துள்ளேன்.  வானவில் ப்ளாண்ட் தெருவோர  சிறார் மேம்பாட்டு அமைப்பின் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினராக சேவையாற்றி வருகிறேன். பல சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணர்வு பேரணிகளை நடத்தியுள்ளேன். அந்தமான் நிக்கோபார் தீவில் 2014 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் திட்டத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட  தேசிய ஒருமைப்பாட்டு முகாமின் தொடக்கமாக, 24 மாநிலங்களிலிருந்து 354 உறுப்பினர்களை ஒருங்கிணைத்து மதநல்லிணக்கப் பேரணி மற்றும் பிராத்தனையை சென்னையில் ஏற்பாடு செய்து நடத்தியுள்ளேன்.  தமிழ் ஆய்வு கட்டுரைகள் வெளி வந்துள்ளன.  மாநில கருத்தரங்கு, தேசிய கருத்தரங்கு, பன்னாட்டு கருத்தரங்குகளில் அமர்வுத் தலைவராக இருந்துள்ளேன்;  மகளிர் தின விழாக்களில் விவாதமேடை தலைவராகவும் இருந்துள்ளேன்.


தேசிய மற்றும் மாநில உறுப்பினர்:
வேலைபார்க்கும் பெண்களுக்கான பாதுகாப்புக் குழுவின் நியமன உறுப்பினராகவும், மாணவர் தேசிய படையின் இயக்குநகரத்தில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கான அமைப்பின் உறுப்பினராக 2017 முதல் பணியாற்றி வருகிறேன்.  தென்னிந்திய வரலாற்று பேரவையின் ஆயுட்கால உறுப்பினராகவும்  தமிழ்நாடு வரலாற்று பேரவையின் ஆயுட்கால உறுப்பினராகவும் உள்ளேன். தமிழக அரசின் புதிய பாடத்திட்ட உருவாக்க குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளேன்.

வழங்கப்பட்ட விருதுகள்:
“பாரத் வித்யா ரத்தன் விருது”, 27 செப்டம்பர் 2017 அன்று புதுதில்லியிலும்;  “ஜீவல் ஆப் இந்தியா விருது”, 10 சனவரி 2018 அன்று கோவாவிலும்; “சர்வதேச கோஹினுர் விருது”, சூலை 7, 2018 அன்று தாஷ்கன்ட்டிலும் (உஸ்பெகிஸ்தான்);  சாஷா அமைப்பின் “பெண் விருது”; மஞ்சு குழுமத்தின் “மஞ்சு விருது” 2010 மற்றும் மதுரையில் மகளிர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தால் “உழைப்பின் சிகரம் விருது” 16.06.2019 அன்றும் வழங்கப்பட்டன.  “சர்வதேச ஸ்டேட்டஸ் விருது”, 2018 ஆம் ஆண்டு பாங்காக், தாய்லாந்திலும்;  மேலும், “ஆசிய-பசிபிக் சர்வதேச கல்வியியல் விருது”, பிப்ரவரி 2019 ஆண்டு சிலோம், பாங்காக், தாய்லாந்திலும்; “வாழ்நாள் சாதனை கல்வியாளர் விருது” (பதக்கத்துடன்) ஏப்ரல் 2019, புதுதில்லியிலும்;  “சர்வதேச கல்வி மேம்பாட்டு சாதனையாளர் விருது”, சூன் 2019, மாஸ்கோவிலும் (ரஷ்யா) ஆகிய விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன்.   “டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் விருது”, 27 சூலை 2019, செங்கல்பட்டில் வழங்கப்பட்டது மற்றும் தஞ்சையில் நடைபெற்ற ‘முதலாவது மொழி காவலர்கள் மாநாடு-2019‘, விழாவில் ‘மொழிக்காவலர் விருது‘ மற்றும் தமிழ்நாடு பொன்விழா ‘சிலம்புச் செல்வர் ம.பொ.சி. விருதும் வழங்கப்பட்டது.

முகவரி                    : முனைவர் ஜே. ஸ்டெல்லா
                           பி 41, சிடார் ப்ளாக்,
சிட்டிலைட் மெடௌவ்ஸ்,
82 ஆண்டாள் அம்மா தெரு,
நொளம்பூர், சென்னை – 95.

தொலைபேசி எண்          : 9941871351 / 044-26531707

மின்னஞ்சல்               : stellaj.mathialagan72@gmail.com
கட்செவி எண்              : 9941871351


No comments:

Post a Comment